நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குடைமிளகாய் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம். குடைமிளகாயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று குடைமிளகாய் மசாலா. இந்த குடைமிளகாய் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
* இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 4-5 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா – 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* புளி – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
பிற பொருட்கள்….
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* தக்காளி – 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் – 4-5 (நீள நீளமாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – சிறிது
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
* வெல்லம் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, மல்லி மற்றும் கசகசா சேர்த்து குறைவான தீயில் 3-4 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால், வெங்காயம் சீக்கிரம் வெந்துவிடும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 7-8 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் புளியையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாயை சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் ஒரு கப் நீர் ஊற்றி கிளறி, வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கரம் மசாலா பொடியைத் தூவி குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் மசாலா தயார்.
Image Courtesy: vegrecipesofindia
இந்த பதிவின் மூலமாக குடைமிளகாய் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குடைமிளகாய் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…