நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பாகற்காய் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பாகற்காய் உடலுக்கு நன்மை பயக்கும் மிகவும் ஆரோக்கியமான காய்கறி. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் புழு, பூச்சிகள் அனைத்தும் அழிந்துவிடும். பொதுவாக பாகற்காயை புளிக்குழம்பு அல்லது பொரியல் செய்து சாப்பிடுவோம். ஆனால் பாகற்காயைக் கொண்டு அற்புதமான மசாலா செய்யலாம். இந்த மசாலா சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
கீழே பாகற்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பாகற்காய் மசாலா குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் கசப்பு அதிகம் தெரியாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பாகற்காய் – 3
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் – சுவைக்கேற்ப
* வெல்லம் அல்லது சர்க்கரை – 1 டீஸ்பூன்
* எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாகற்காயின் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாகற்காயை போட்டு, 2-3 டேபிள் பூன் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து உப்பு தூவி நன்கு தக்காளி வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மாங்காய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு, சர்க்கரை தூவி கிளறி விட வேண்டும்.
* பின் மூடி வைத்து குறைவான தீயில் பாகற்காயில் மசாலா அனைத்தும் சேரும் வரை ஒரு 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாகற்காய் மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக பாகற்காய் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பாகற்காய் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…