நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நாவை ஊறச் செய்யும் கடலை மாவு லட்டு எப்படி தயாரிப்பது? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பேசன் ஹா லட்டு வட இந்தியாவில் எல்லா பண்டிகையின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த சுவை மிகுந்த ருசியான லட்டு கடலை மாவை நெய்யில் வறுத்து அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து கலர்புல்லாக செய்யும் ரெசிபி ஆகும்.
பேசன் ஹா லட்டு நமது தமிழ்நாட்டில் கடலை மாவு உருண்டை என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா சுப நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறி மகிழ்வர். நாக்கில் எச்சி ஊற வைக்கும் இந்த ஸ்வீட் எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே குறைந்த சமையல் நேரத்தில் செய்து அசத்திடலாம். எனவே இது உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற இனிப்பு வகை ஆகும்.
இந்த பேசன் ஹா லட்டு பார்ப்பதற்கு மிகவும் கலர்புல்லாக மென்மையாக இருப்பதோடு அதன் நெய் சொட்டும் நறுமணமும் மீண்டும் மீண்டும் கடித்து சுவைக்க தூண்டும். இந்த லட்டை அட்டகாசமாக வீட்டிலேயே செய்வதற்கு தேவையான செய்முறை விளக்கங்களும் மற்றும் வீடியோ செய்முறை விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: ஸ்வீட்ஸ்
Serves: 8 லட்டுகள்
பொடித்த சர்க்கரை – 1 கப்
கடலை மாவு – 2 கப்
நெய் – 3/4 கப்
தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – சிறுதளவு
நறுக்கிய பாதாம் பருப்பு (அலங்கரிக்க) – 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பிஸ்தா பருப்பு (அலங்கரிக்க) – 1 டேபிள் ஸ்பூன்
1. சூடான ஒரு கடாயில் நெய்யை ஊற்ற வேண்டும்
2. தீயை மிதமான சூட்டில் வைத்து கொண்டு கடலை மாவை போட்டு நன்றாக கிளறவும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்க முடியும்
3. பிறகு மாவின் கலரும் அதன் பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடங்களாவது தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும்
4. லேசாக தண்ணீர் சேர்த்து அது நுரை நுரையாக தண்ணீர் மேலே எழும்பும் வரை சமைக்க வேண்டும்
5. அந்த தண்ணீர் மறையும் வரை நன்றாக கலக்க வேண்டும்
6. அதை இன்னொரு பெளலில் எடுத்து வைத்து 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
7. இதனுடன் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்
8. பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்
9. இதனுடன் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
10. இந்த கலவையை 10 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்க வேண்டும்
11. பிறகு அதை எடுத்து சமமான அளவில் லட்டு மாதிரி உருண்டை பிடிக்க வேண்டும்
12. அதன் நடுவில் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
1. சூடான ஒரு கடாயில் நெய்யை ஊற்ற வேண்டும்
2. தீயை மிதமான சூட்டில் வைத்து கொண்டு கடலை மாவை போட்டு நன்றாக கிளறவும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்க முடியும்
3. பிறகு மாவின் கலரும் அதன் பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடங்களாவது தண்ணீர் சேர்த்து சமைக்க வேண்டும்
4. லேசாக தண்ணீர் சேர்த்து அது நுரை நுரையாக தண்ணீர் மேலே எழும்பும் வரை சமைக்க வேண்டும்
5. அந்த தண்ணீர் மறையும் வரை நன்றாக கலக்க வேண்டும்
6. அதை இன்னொரு பெளலில் எடுத்து வைத்து 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
7. இதனுடன் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்
8. பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்
9. இதனுடன் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
10. இந்த கலவையை 10 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் வைக்க வேண்டும்
11. பிறகு அதை எடுத்து சமமான அளவில் லட்டு மாதிரி உருண்டை பிடிக்க வேண்டும்
12. அதன் நடுவில் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
இந்த பதிவின் மூலமாக நாவை ஊறச் செய்யும் கடலை மாவு லட்டு எப்படி தயாரிப்பது? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நாவை ஊறச் செய்யும் கடலை மாவு லட்டு எப்படி தயாரிப்பது? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…