நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பேபி பொட்டேடோ மஞ்சூரியன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில்
தேவையான பொருட்கள்:
* பேபி பொட்டேடோ – 14
* சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
* மைதா – 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மஞ்சூரியனுக்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேட் – 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
* குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)
* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
* சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
* வினிகர் – 1/2 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் பச்சை பகுதி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* சோள மாவு – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பேபி பொட்டேடோவைப் போட்டு நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, உருளைக்கிழங்கின் தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சிறிய பௌலில் சோள மாவு மற்றும் நீர் ஊற்றி, சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, மிளகுத் தூள், இஞ்சி பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நீரை ஊற்றி, மிகவும் கெட்டியாக இல்லாமல் ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை இரண்டாக வெட்டி, மாவில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதியை போட்டு நன்கு வதக்கவும். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகுத் தூள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பின்பு அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் வினிகரை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
* பிறகு பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் அதன் மேல் ஸ்பிரிங் ஆனியனின் பச்சைப் பகுதியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பேபி பொட்டேடோ மஞ்சூரியன் தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக பேபி பொட்டேடோ மஞ்சூரியன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பேபி பொட்டேடோ மஞ்சூரியன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…