நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி நார்ச்சத்துக்களும் அதிகம் இருக்கும் என்பதால், அவ்வப்போது கிழங்கு வகைகளை சமைத்து சாப்பிடுவது நல்லது. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. ஆனால் அந்த உருளைக்கிழங்கு போலவே சேப்பங்கிழங்கும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் அந்த சேப்பங்கிழங்கை ஆந்திராவில் செய்வது போன்று ஃப்ரை அல்லது வறுவல் செய்து, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சேப்பங்கிழங்கு – 500 கிராம்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் உள்ள நீரை வெளியே ஊற்றிவிட்டு, கிழங்குகளை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து பத்து நொடிகள் தாளிக்கவும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட கிழங்குகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மசாலா பொடிகள் கிழங்குடன் நன்கு ஒன்று சேரும் வரை மற்றும் மொறுமொறுப்பாகும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…