நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இந்த வாரம் ஒரு ஆந்திரா ரெசிபியை முயற்சி செய்யுங்கள். அது தான் ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி. இது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதோடு, இந்த ரெசிபியை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்தால், அவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 1 கிலோ
* முருங்கைக்காய் – 2
* தக்காளி – 2 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 6
* கிராம்பு – 5
* மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் பவுடர்/தேங்காய் விழுது – 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 4 பல் (பேஸ்ட் செய்து கொள்ளவும்)
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – தேவையான அளவு
அரைப்பதற்கு…
* பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
* இஞ்சி – 1 எலுமிச்சை அளவு
* பூண்டு – 12 பல்
* பட்டை – 1 துண்டு
* கொத்தமல்லி – 1/4 கப்
* புதினா – 1/4 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனுடன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், கிராம்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, முருங்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு 2 நிமிடம் வதக்கிய பின், அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிவது போன்று தெரியும் போது, அதில் சிக்கனை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நிறம் மாறும் வரை சிக்கனை நன்கு வதக்க வேண்டும்.
* பின் மூடி வைத்து குறைவான தீயில் 5-8 நிமிடம் சிக்கனை நீர் விடும் வரை வேக வைக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு கப் சுடுநீரை ஊற்றி, 10-15 நிமிடம் சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் பவுடர், மல்லி தூள், பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: gethascooking
இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…