நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான potato pakora recipe : ஆலு பக்கோடா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது சூடாகவும், காரமாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையாக உள்ளதா? எப்போதும் பஜ்ஜி, போண்டா செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அதைக் கொண்டு அட்டகாசமான ருசியைக் கொண்ட ஆலு பக்கோடா செய்யுங்கள். இதுவரை நீங்கள் வெங்காய பக்கோடா செய்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆலு பக்கோடா காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு – 1 கப்
* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 2 (மெல்லிசாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* சாட் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் – 1/4 கப் முதல் 1/2 கப் வரை
செய்முறை:
* ஒரு பௌலில் எண்ணெயைத் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சற்று கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஆலு பக்கோடா தயார்.
இந்த பதிவின் மூலமாக potato pakora recipe : ஆலு பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி potato pakora recipe : ஆலு பக்கோடா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…