சைவம்

Navratri Special Sabudana Sundal Recipe In Tamil | நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி சுண்டல்

Sabudana Sundal
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல் (Sabudana Sundal) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

9 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பூஜையின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பிரசாதம் செய்து படைப்பீர்களா? இன்று என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஜவ்வரிசி சுண்டல் செய்யுங்கள். ஜவ்வரிசி சுண்டல் செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இதற்கு ஜவ்வரிசியும், பாசிப்பருப்பும் இருந்தால் போதும். ஜவ்வரிசி சுண்டல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

* ஜவ்வரிசி – 1 கப்

* பாசிப்பருப்பு – 1/4 கப்

* துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 1 (கீறியது)

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

Sabudana Sundal செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, பருப்பு மூழ்கும் வரை நீரை ஊற்றி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது பருப்பானது பார்க்கும் போது முழுசாகவும், அழுத்தும் போது மென்மையாகவும் இருக்கும் அளவு வேக வைத்து இறக்க வேண்டும். பொதுவாக பாசிப்பருப்பு வேக 3-5 நிமிடம் எடுக்கும்.

* பின் ஜவ்வரிசியை நீரில் அலசி, குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக ஜவ்வரிசியில் அளவுக்கு அதிகமாக நீர் ஊற்றி விட வேண்டாம். ஜவ்வரிசி மூழ்கும் வரையில் மட்டும் நீர் ஊற்றினால் போதும். இல்லாவிட்டால், ஜவ்வரிசி அளவுக்கு அதிகமான நீரை உறிஞ்சி குலைந்துவிடும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி சுண்டல் தயார்.

இந்த பதிவின் மூலமாக நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment