நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி சரியான காம்பினேஷன். சட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பலரும் விரும்பி சாப்பிடுவது தக்காளி சட்னி. இந்த தக்காளி சட்னியை பலவாறு செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* வெந்தயம் – சிறிது
* காஷ்மீரி மிளகாய் – 2
* கறிவேப்பிலை – 10-12
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* தக்காளி – 1 கப் (நறுக்கியது)
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் காஷ்மீரி மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து தக்காளியை நன்கு வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அதை இறக்கி புளியை சேர்த்து கிளறி, குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். இப்போது ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: vegrecipesofindia
இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .